இலங்கைக்கு கடத்த முயன்ற 140 கிலோ கேரள கஞ்சாவுடன் – தமிழகத்தில் 4 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவுடன் 4 பேர் மண்டபம் பொலிஸாரால் கைதுசய்யப்பட்டுள்ளனர்.

மண்டபத்திலிருந்து – இலங்கைக்கு கஞ்சா கடத்த முற்பட்டதாக தமிழக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சுமார் 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 140கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் அதை கடத்த முயன்ற 4 பேர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்ப ட்டனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய 4 வாக னங்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!