தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படையினர்!

கடலில் 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடலில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். அப்போது தமிழக மீனவர்கள் அங்கிருந்து புறப்பட முற்பட்டப்போதும் 3 படகுகளை சுற்றிவளைத்தது இலங்கை கடற்படை. பின்னர் அதில் இருந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை அவர்கள் கைது செய்தனர். 3 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் கடற்படையிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. எனினும் தமிழக மீனவர்கள் அதனை மறுக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!