போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கை இளைஞர் அதிரடி கைது!

சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபரை, போலீசார், நேற்று, கைது செய்தனர். இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுரேஷ்ராஜன், 39. இவருடன், 12 பேர், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் பகுதியில், பாஸ்போர்ட் இல்லாமல், போதைப் பொருளுடன் தங்கி இருந்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கியூ பிரான்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேரை, கடந்த ஆண்டு, கைது செய்து, நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், சுரேஷ் தலைமறைவாக இருந்து வந்தார்.

இதற்கிடையில், கேரளா மாநிலத்தில் பதுங்கியிருந்த, சுரேஷை, கோயம்புத்துார் கியூ பிரான்ச் போலீசார் கைது செய்து, காஞ்சிபுரம் கியூ பிரான்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர் .அதைத் தொடர்ந்து, மேற்கண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த சுரேஷை கைது செய்து, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட சிறையில், போலீசார் அடைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!