மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
கட்சியின் கொள்கைகளுக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இரண்டு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் வட மேல் மாகாணசபைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கட்சிக்கு விரோதமாக செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
















