தமிழருக்கு மாகாணசபை இடைக்கால நிர்வாகமே; முதலமைச்சர் கருத்து

vikineswaran5வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக எவையுமே கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்குத் தேவையான அதிகாரப் பரவல் பற்றியும் அரசு கவனத்தில் எடுக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் அவசியம்.

ஆனால் அத்தகைய அதிகாரப் பரவலாக்கலுக்கு 13 ஆவது திருத்தம் ஒருபோதும் பொருத்தமானதாக இருக்காது. வேண்டுமானால் மாகாண சபையை இடைக்கால மாற்று நிர்வாகமாக அமைத்து இனப் பிரச்சினைக்கான தீர்வின் அடுத்த கட்டுத்துக்கு கொண்டு செல்லலாம்.

நாங்கள் சர்வதேசத்தையே இதற்காக நம்பவேண்டி இருக்கிறது. எமக்கு பல நன்மைகளைச் செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது – என்றார்.

Tags: ,

Leave a Reply