கே.பி.யுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐ.தே.க.கேள்வி

unpநாட்டின் மூலச் சட்­டத்தை மீறி விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தற்­போ­தைய தலைவர் கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நா­த­னுடன் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருக்கும் ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் பல­ருக்கும் எதி­ராக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

தடை செய்­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத இயக்­கத்­தி­ன­ருடன் ஜனா­தி­பதி எவ்­வாறு ஒன்­றாக நின்று படம் பிடிக்க முடியும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மல்ல. அவர்­க­ளுடன் அர­சியல் ரீதி­யாக தொடர்­பு­களை வைத்­தி­ருப்­பது என்­பது தவ­றான கருத்தோ விட­யமோ அல்ல. ஆகவே அர­சாங்கம் புனர்­வாழ்வு அளிக்­கப்­ப­டாத விடு­தலை புலி தலை­வர்­க­ளுடன் ஒன்­றாக இணைந்து செயற்­பட்டு ஏனையோரை குறை கூறு­வது வேடிக்­கை­யாக உள்­ளது.
நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வந்­தி­ருந்த போதும் அர­சாங்கம் இவ்­வாறே இன­வாதம் பேசி­யது என்றும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் விசேட செய்­தி­யாளர் மாநாடு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ராஜ­கி­ரி­யவில் நடை­பெற்ற போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இங்கு உரை­யாற்­றிய ஐ.தே.க. வின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க கூறு­கையில்,

மூன்று மாகா­ணங்­க­ளுக்­கு­மான தேர்­தல்கள் நெருங்கி விட்­டன. அர­சாங்­கத்தின் புல­னாய்வு அறிக்­கை­களின் பிர­காரம் வடக்கில் கூட்­ட­மைப்பின் பெரும்­பான்­மை­யான வெற்றி உறு­தி­யா­கி­யுள்­ள­துடன் வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் ஆளும் கட்சி படு­மோ­ச­மான தோல்­வியை சந்­திக்கப் போகின்­றது.

இதனை திசை திருப்பிக் கொள்ள வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்டு எதிர்க்­கட்­சி­யி­னரை தாக்­கு­கின்­றனர். நுரைச்­சோ­லையில் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தாக்­கப்­பட்டார்.

இவ்­வாறு மிகவும் மோச­மான வன்­மு­றை­களை எதிர்க்­கட்­சிகள் மீது கட்­ட­விழ்த்து விட்டு மோச­மான தேர்தல் வெற்­றியை அர­சாங்கம் கைப்­பற்ற முயற்­சிக்­கின்­றது. நாள் கூலிக்கு ஆட்கள் ஜனா­தி­ப­தியின் கூட்­டங்­க­ளுக்கு அழைத்து வரப்­ப­டு­கின்­றனர். ஆகவே பொது­மக்கள் இந்த தேர்­தலை அர­சுக்கு எதி­ராக பயன்­ப­டுத்த வேண்டும்.

தன்னை சர்­வா­தி­கா­ரி­யாக காட்டிக் கொள்ள விரும்­பாத ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜன­நா­யகவாதி­யாக செயற்­பட வேண்டும். அதா­வது 17 ஆவது திருத்தச் சட்­டத்தை 24 மணித்­தி­யா­லத்­திற்குள் கொண்டு வர­மு­டியும். அதே­போன்று உறு­தி­ய­ளித்­தது போன்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க முடியும். இவற்றை செய்தால் ஓர­ள­வேனும் ஜன­நா­யக வாதி­யாக தற்­போ­தைய ஜனா­தி­ப­தியை ஏற்றுக் கொள்ள முடியும். அவ்­வாறு இல்­லாது தேசிய ரீதியில் 60 சத­வீ­தத்தை குடும்ப நிர்­வா­கத்தின் கீழ் வைத்துக் கொள்­வதும் ஊட­கங்­களை அடக்கி உரி­மை­களை மீறு­வதும் சர்­வா­தி­கா­ரத்­திற்­கான வெளிப்­பாடே தவிர ஜன­நா­யகம் அல்ல.

இலங்கை வந்த ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் கருத்தும் அவ்­வா­றா­ன­தொன்றே. ஆனால் அர­சாங்கம் அதனை மூடி மறைக்க பெளத்த கொடியை காட்டி இன­வா­தத்தை தூண்டி விட்­டது. தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு தடை செய்­யப்­பட்ட அமைப்பு அல்ல. அவர்­க­ளுடன் அர­சியல் தொடர்­பு­களை மேற்­கொள்ள ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு உரிமை உள்­ளது. இதில் தலை­யிட ஜனா­தி­பதி உள்­ளிட்ட ஆளுங் கட்­சிக்கு அதி­காரம் இல்லை.

ஆனால் விடு­தலைப் புலிகள் அமைப்பு இன்னும் தடை செய்­யப்­பட்ட அமைப்பு என்­பதை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். முறையாக விசாரணை மேற்கொள்ளாது தற்போதைய புலிகளின் தலைவர் கே.பி.யுடன் அரசு எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். அண்மையில் ஜனாதிபதியும் கே.பி.யுடன் ஒன்றாக நின்று படம் பிடித்தார். இதுநாட்டின் மூலச்சட்டத்திற்கு எதிரான விடயமாகும். இதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

Tags: , ,

Leave a Reply